சிந்தனை பூத்தது
எந்தனை மனதில்
விந்தை புரிந்திடும்
முந்தை நினைவுகள்
காலையில் மலர்வது
கவிதைகள் ஆயிடுமோ ?
மாலையில் மலர்பவை
மயக்கத்தின் நிகழ்வோ ?
நிற்பவை காண்பதும்
நடப்பவை தோற்றமும்
நற்றமிழ் வடிவினில்
நல்லினிய கவிதைகளோ?
எத்தகை உயர்வும்
அத்தகை தாழ்வும்
வித்தக வடிவினில்
விதைப்பது கவிதையோ ?
முத்தமிழ்ச் சுவையை
முழுதாய் உணர்ந்திடும்
என்மன உணர்வினில்
எழுவதென் கவிதைகளோ?
எந்தையும் தாயும்
முந்தையோர் வாழ்வில்
சிந்தையில் விதைத்தவை
சிந்திடும் கவிதைகளோ ?
விண்ணில் தவழும்
என்னில் உணர்வுகள்
அன்னைத் தமிழில்
பின்னிடும் கவிதைகள்
வேண்டும் , வேண்டும்
மீண்டும் , மீண்டும்
மண்ணில் பிறந்தால்
மனதினில் தமிழெனக்கு
சக்தி சக்திதாசன்
No comments:
Post a Comment