Tuesday, October 17, 2023

இன்று அக்டோபர் 17ம் தேதி எனது எழுத்துகளுக்கு.மானசீகக் குருவாக நான் வரித்துக் கொண்டிருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 42 வது நினைவுதினம்.
இதை அவரது நினைவுதின வாரமாக ஒவ்வொரு நாளும் ஒரு கவிமாலை சாத்துகின்றேன்.

கனவுகளில் காற்றாக
நினைவுகளில் நின்றாடும்
புனைவுகளின் மன்னனே !
புவியுலகின் கவிமைந்தா !

சிறுகூடல் பட்டியிலே
சிற்றூற்றாய் ஊற்றெடுத்து
சிலையாகி வாழுகின்றாய்
சிங்காரச் சென்னையிலே

காற்றோடு கலந்தாயோ !
கானங்களின் மன்னவனே !
கவியரசன் நீதானென்று
கலையுலகம் போற்றுதய்யா

கலங்காதிரு மனமேயென்று
காட்டாற்று வெள்ளெமொன்று
கண்ணே , கலைமானேயென்று
கண்மூடிக் காய்ந்ததய்யா !

தமிழன்னைத் தாலாட்டில்
தமிழ்கற்ற புலவனய்யா
தமிழர்தம் நெஞ்சங்களில்
தனியிடத்தில் வாழ்கின்றாய்

உடல்நீக்கி ஆன்மாவாய்
உலாச்சென்ற கண்ணதாசா !
உன்னினைவு வாரத்தில்
உதிர்க்கின்றேன் முதற்கவிதை

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்

கவியரசர் கண்ணதாசன் நினைவுவாரம் நாள் ஒன்று

இன்று அக்டோபர் 17ம் தேதி எனது எழுத்துகளுக்கு.மானசீகக் குருவாக நான் வரித்துக் கொண்டிருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 42 வது நினைவுதினம்.
இதை அவரது நினைவுதின வாரமாக ஒவ்வொரு நாளும் ஒரு கவிமாலை சாத்துகின்றேன்.

கனவுகளில் காற்றாக
நினைவுகளில் நின்றாடும்
புனைவுகளின் மன்னனே !
புவியுலகின் கவிமைந்தா !

சிறுகூடல் பட்டியிலே
சிற்றூற்றாய் ஊற்றெடுத்து
சிலையாகி வாழுகின்றாய்
சிங்காரச் சென்னையிலே

காற்றோடு கலந்தாயோ !
கானங்களின் மன்னவனே !
கவியரசன் நீதானென்று
கலையுலகம் போற்றுதய்யா

கலங்காதிரு மனமேயென்று
காட்டாற்று வெள்ளெமொன்று
கண்ணே , கலைமானேயென்று
கண்மூடிக் காய்ந்ததய்யா !

தமிழன்னைத் தாலாட்டில்
தமிழ்கற்ற புலவனய்யா
தமிழர்தம் நெஞ்சங்களில்
தனியிடத்தில் வாழ்கின்றாய்

உடல்நீக்கி ஆன்மாவாய்
உலாச்சென்ற கண்ணதாசா !
உன்னினைவு வாரத்தில்
உதிர்க்கின்றேன் முதற்கவிதை

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்

Tuesday, October 03, 2023

தலைமுறை செழித்து வாழட்டுமே !

தித்திக்கும் சிந்தையெலாம் நிறையும்
தீபமாய் ஒளிரும் என் தாய்மொழி
தந்திட்ட இன்பமெல்லாம் மீட்டிட இத்
தரணியிலே ஒரு வீணையில்லை

முத்திக்கும் தன் புகழை முரசறைந்து
முத்தமிழாய் எம் வாழ்வில் தவழ்ந்திடும்
செம்மொழியாம் நாம் கண்ட தமிழ்மொழி
செப்பிடுவேன் உயிர்மூச்சு உள்ளவரை

வித்தகு கவிஞர்களைத் தந்த தமிழ் புவியில்
வியத்தகு வகையில் மலர்ந்திட்ட மொழி
எவ்வகை சொன்னாலும் தன்னுள் சுவையை
ஏந்திடும் தேன்துளி வெள்ளமாம் இத்தமிழ்

மெத்தகு மேதைகளாய் பல கற்றிட வேண்டுமென
மேவிட இல்லை விதிகளை என் தமிழ்
போற்றிடும் நெஞ்சங்களில் எழும் துளிகளை
சாற்றிட்டால் போதுமென போதித்த மொழி

எத்தகை இலக்கிய ஆய்வும் செய்தவன் இல்லை
எந்தனின் தமிழின் ஆழம் சொற்பமே
கவிகளில் கோலோச்சிய குருவாய் வரித்தேன்
 கவியரசன் கண்ணதாசன் தனையே

 நித்தமும் நெஞ்சில் தமிழன்னையின் பாதங்களில்
நற்சிரம் தாழ்த்தி நானும் தொழுதே
சொற்வை கொஞ்சம் கூட்டி கவிகளைச்
செய்திடும் செயலே என் சேவை

செப்பிடும் வரிகளில் சிற்சில உண்மைகள்
சேர்த்திட்டே கவிகளை யாத்து
அன்புடன் இணைந்திடும் மனங்களின் முன்
அளிக்கின்றேன் எந்தன் காணிக்கையாய்

இத்தரை மீதினில் என்னுயிர் நிலைத்திடும்
இனிதொரு காலங்கள் மட்டும் அன்னைத்
தமிழின் வழி அவள் புகழ் பரப்பிடும் போது 
தலைமுறை செழித்திட வேண்டுகிறேன்

சக்தி சக்திதாசன்

Monday, October 02, 2023

காதல் பொழுதொன்று கவிதை வரிகளில்

கற்பனையில் விரிந்த ஒரு காதல் பொழுதினை கவிதை வரிகளாக்கிக் கணனியிலே தவழ விட்ட வேளையிது.


விரிந்த உன்  உதடுகளில்
மலர்ந்த புன்னகைக்குள்
புதைந்து போன இதயத்தினுள்
புலர்ந்ததொரு காதலன்றோ !

மலை தழுவும் மேகம் கண்டு
மனமெங்கும் மையல் கொண்டு
முகம் தேடி ஓடி வந்தேன்
மேகமென ஏன் கலைந்தாய் ?

சுரக்குமெந்தன் உணர்வுகளை
ஓடுகின்ற ஓடையாக்கி
கனவு எனும் கப்பல் செய்து
காதல் வழி செல்ல விட்டேன்

உனைக் காணா வேளைகளில்
எனைத் தொலைத்துத் தேடுகிறேன்
கணப் பொழுது கண்டு விட்டால்
கண் நிறைத்து மூடுகிறேன்

விழி வீசும் பார்வைக் கணை
நெஞ்சமதைத் துளைத்துச் சென்று
கல்லில் பதித்த சித்திரமாய்
உன் வதனம் வரைந்ததடி !

சக்தி சக்திதாசன்