அன்புடை நெஞ்சங்களே ! என் அன்புத் தந்தையின் தொண்ணூற்ரோராவது அகவையில் (04.05.2007) இன் இதய் அஞ்சலிகளி உங்கள் முன்னால் சமர்ப்பிக்கின்றேன்
நினைவெல்லாம் நிறைந்திருக்கும் நித்தியமே
எந்தையே உன்னை நினைந்து
முந்தைய நினைவுகளில் முக்காடி
சிந்திய கண்ணீர்த்துளிகள் பன்னீராய்
வந்ததுன் பிறந்த நாள் இந்நாளில்
விந்தினுள் சிறுபொறியாய் விதைத்தனை - உலகப்
பந்தினுள் நான் உருள்வதின் சூட்சுமம்
சிந்தையில் துலங்குது இவ்வேளை
மந்தையில் நானொரு அங்கம் தானே
பொந்தினுள் காத்திடும் குஞ்சைப் போல
தந்தது நீயோர் அன்பு வாழ்க்கை
நினைந்து நெஞ்சில் அக்காலம் தனை
வினைந்து மனம் உருகுது இக்காலம் தனில்
புனைந்து கவிகள் பல நான் அவனியில்
தெளிந்து உண்மை அன்பை அறிந்த வேளை
விரைந்து நீயும் விண்ணில் ஏகி எங்கோ
மறைந்து போன இடம் தேடியலைகின்றேன்
களைந்து தீயவினைகளை மனதிலிருந்து
விளைந்த ஞானம் தனில் நான் கண்டது
முடிந்த உன் வாழ்வின் வரலாறு தானே
தொடர்ந்த வழிகள் என்றும் உன் அடிகளே
பொழிந்த தத்துவத் துளிகளில் அன்று
புதைந்த உண்மையை அறிந்திலேன்
தெரிந்த போது அப்பா இன்று நீ
கரைந்து கலந்தனை தென்றலில்
வரைந்த வாழ்வதன் வழிதனில் இன்று
நிறைந்த அகவைகள் தொண்ணூற்றொன்றாய்
பறந்த வருடங்கள் தனில் அழியாதே
மொழிந்த உந்தன் அன்பு வார்த்தைகள்
சரிந்த கோபுரம் நீயென நினைத்து
கறந்த அனுபவப் புதையலை இங்கே
சிறந்த பாடமாய்க் கொண்டே நானும்
நடந்து முடிப்பது வாழ்வை நிச்சயம்
அன்புடன்
சக்தி சக்தி தாசன்
Thursday, May 03, 2007
Wednesday, May 02, 2007
நினைவுகளின் நீளத்தில்
என் தந்தையின் 91வது பிறந்தநாளில் அவரின் நினைவாக 04.05.2007
அவனியில் உந்தன் நிழல் பட்டு
அப்பா
அகவைகள் ஒன்பது நூறுகளோடு
அகன்ரது இன்னும் ஒன்றே இன்று
அன்பின் திருவுருவம்
அறிவின் மறுவடிவம்
ஜயன் நீயெனக்கு
அளித்ததோ பெருந் தவமே !
சாந்தத்தின் புதல்வனாய்
சத்தியத்தின் மைந்தனாய்
சாதனைகளின் விளைநிலமாய்
சாகாவரம் பெற்றோனோ - நீ
சரித்திர நாய்கன் தான்
வேதனைகளைப் விதைகளாக்கி
போதனைகளைப் பசளையாக்கி
வாழ்க்கை எனும் வயல்வெளியில்
நியாயங்களை அறுவடை செய்தவனே
காலம் உனன்னை நோக்கி
களமனுப்பிய சூறாவளிகள்
ஒன்றல்ல ! இரண்டல்ல !
ஓய்ந்து நீயும் சாய்ந்து விடவில்லை
ஓயாமல் எரிந்த மெழுகுவர்த்தி நீ
உன் பெருமை தனையறியார்
தம்மைத் தாமே அறியார்
தாம் வந்த பாதையறியார்
பயணங்களின் திசையும் புரியார்
உன் வழியில் வளைவு இல்லை
உன் நெஞ்சில் வஞ்சம் இல்லை
உன் கண்ணில் கலக்கம் இல்லை
உன் வாழ்வில் தோல்வி இல்லை
இந்த உன் பிறந்த நாளில்
உன் நினைவுகளின் நீளத்தில்
கனவுகளின் ஆழத்தில்
அப்பா
அஞ்சலிகள் செலுத்தி நானும்
அடிகளைத் தொழுது நின்றேன்
அஞ்சலியுடன்
சக்தி சக்திதாசன்
அவனியில் உந்தன் நிழல் பட்டு
அப்பா
அகவைகள் ஒன்பது நூறுகளோடு
அகன்ரது இன்னும் ஒன்றே இன்று
அன்பின் திருவுருவம்
அறிவின் மறுவடிவம்
ஜயன் நீயெனக்கு
அளித்ததோ பெருந் தவமே !
சாந்தத்தின் புதல்வனாய்
சத்தியத்தின் மைந்தனாய்
சாதனைகளின் விளைநிலமாய்
சாகாவரம் பெற்றோனோ - நீ
சரித்திர நாய்கன் தான்
வேதனைகளைப் விதைகளாக்கி
போதனைகளைப் பசளையாக்கி
வாழ்க்கை எனும் வயல்வெளியில்
நியாயங்களை அறுவடை செய்தவனே
காலம் உனன்னை நோக்கி
களமனுப்பிய சூறாவளிகள்
ஒன்றல்ல ! இரண்டல்ல !
ஓய்ந்து நீயும் சாய்ந்து விடவில்லை
ஓயாமல் எரிந்த மெழுகுவர்த்தி நீ
உன் பெருமை தனையறியார்
தம்மைத் தாமே அறியார்
தாம் வந்த பாதையறியார்
பயணங்களின் திசையும் புரியார்
உன் வழியில் வளைவு இல்லை
உன் நெஞ்சில் வஞ்சம் இல்லை
உன் கண்ணில் கலக்கம் இல்லை
உன் வாழ்வில் தோல்வி இல்லை
இந்த உன் பிறந்த நாளில்
உன் நினைவுகளின் நீளத்தில்
கனவுகளின் ஆழத்தில்
அப்பா
அஞ்சலிகள் செலுத்தி நானும்
அடிகளைத் தொழுது நின்றேன்
அஞ்சலியுடன்
சக்தி சக்திதாசன்
Subscribe to:
Posts (Atom)