சிரிக்காதே !
சிவந்த அதரங்களில்
சிந்தும் புன்னகையில்
சித்தம் சிதறுதே !
நடக்காதே !
நெளிந்திடும் இடையது
உடைந்திடும் கொடியென
வருந்திடும் நெஞ்சமே !
வளைக்காதே !
வளைந்திடும் கைகளில்
வளையல்கள் குலுங்கினால்
கிளர்ந்திடும் உணர்வுகள் !
பேசாதே !
வீணையின் நாதமென
பொழிந்திடும் குரலிசை
மயக்கிடும். இதயத்தை
நொறுக்காதே !
பார்வையைக் கனலாக்கி
தீயினைம் கணையாக்கி
உள்ளத்தைப் பொசுக்காதே !
தூங்காதே !
விழிகள் தூங்காதே
கனவெனும் தேரினில்
கன்னிநீ வராவிட்டால் !
பிரியாதே !
உயிரெனைப் பிரியாதே
உயிராக நீயென்னுள்
உணர்வோடு கலந்திட்டால் !
எழுதாதே !
தமிழென்னும் மொழியில்
உள்ளமெனும் தாளினிலே
காதெலெனும் கவிதையினை
புரியாதே !
எவருக்குமே புரியாதே !
என்னுள்ளக் காதலியாய்
என்னுள்ளே தமிழென்றே !
சக்தி சக்திதாசன்