Sunday, May 31, 2026

உள்ளம் துள்ளுதடா தம்பி

உள்ளம் துள்ளுதடா தம்பி
வையகத்தில் நானுன்னை
நினைக்கையிலே

​நெஞ்சம் நிரம்புதடா தம்பி
உந்தன் செய்கைகளை நம்பி
எந்தன் எண்ணம் மேவுகையில்

​பள்ளம் போலிங்கு இங்கு தம்பி
உள்ளம் கொண்டோர் பலரே
வெள்ளம் நீயெனப் பாய்ந்திடு !

​சின்னப் பாலகர் தம்பி
தின்ன வழியின்றி அழுவதை
எதிர்த்துப் போரிடு வெம்பி

​கண்களை மூடி நானும் தம்ப
காணாமல் இருந்தது பாவம்
உன்னால் முடியும் யதம்பி

​பந்தம் என்றொரு விலங்கைத் தம்பி
காலில் பிணைத்தது காரணம்
தெம்புடன் நீயும் எழுந்திடுவாய்

​நாளைய மேதினி தம்பி
நிச்சயம் உனதென நம்பி
நிமிர்ந்திடு நீயும் தோள்களை எம்பி

உழைக்கும் கைகள் தம்பி
உலகை தாங்கிடும் தூண்கள்
அவற்றின் வலியை உணர்ந்திடு நீ

அழுதிடும் ஓசைகள் தம்பி
அமைதியில் மூழ்கிடும் போது
அதை எழுப்பிடு குரலாய் நீ

இருள் சூழ்ந்த பாதை தம்பி
இமைக்கும் நேரத்தில் நீயே
ஒளி வீசிடும் தீபமாய் வா

சொல்லும் சத்தியம் தம்பி
சோர்வின்றி நிற்கும் ஆயுதம்
அதைத் தழுவி நடப்பாய் நீ

வஞ்சம் நிறைந்த இவ்வுலகம் தம்பி
வழிதவற விடாமல் நீயே
நியாயத்தின் நெஞ்சமாய் நில்லு

சக்தி சக்திதாசன்

Friday, May 29, 2026

எனதன்னை சிரிக்கின்றாள் ;

எனதன்னை சிரிக்கின்றாள் ;
என்னோடு இருக்கின்றாள்
​என் எண்ண ஊற்றுக்களில்
தமிழகப் பொழிகின்றாள்

​நான் நடக்கும் பாதையெல்லாம்
நிழலாகத் தொடர்கின்றாள்
​என் மனதிலூறும் கவிதைகளில்
கருத்தாகக் கலக்கின்றாள்

​மடிமீது தவழ்ந்த என்னைத் தமிழ்
மண்மீது போட்டு
​மண்வாசம் ஊட்டியெந்தன்
தமிழ்நேசம் வளர்த்தெடுத்தாள்

​சொல்லூறும் வேளைகளில் தமிழ்த்
தேனாக்கித் தந்து
​சோறில்லாப் பொழுதுகளில்
சோராத வகை செய்தாள்

என் விழியின் ஒளியிலெல்லாம்
வண்ணமாய் விரிகின்றாள்
என் விழித்திரை கனவுகளிலும்
வாசகமாய் நிறைகின்றாள்

என் உயிரின் இசையிலெல்லாம்
இனிமையாய் ஒலிக்கின்றாள்
என் உள்ளத்தின் ஆழமெல்லாம்
உறவாக நின்றிருக்கின்றாள்

என் கண்ணீரின் துளியிலெல்லாம்
கருணையாய் மலர்கின்றாள்
என் கவலையின் இருளிலெல்லாம்
கதிரவனாய் உதிக்கின்றாள்

என் மொழியின் மூச்சிலெல்லாம்
முத்தாகப் பொலிவுறுகின்றாள்
என் மனதின் திசையிலெல்லாம்
முத்தமிழாய் விளங்குகின்றாள்

என் வாழ்வின் வழியிலெல்லாம்
விளக்காக ஏந்துகின்றாள்
என் வரிகளின் உயிரிலெல்லாம்
வேராகப் பதிந்திருக்கின்றாள்

சக்தி சக்திதாசன்

உனக்குள் ஒரு உலகம்

உனக்குள் ஒரு உலகம்
உறங்கிக் கொண்டிருக்கிறது
விழித்துக் கொண்டால் இங்கே
விடியல் பிறக்கும் தம்பி

​கண்களின் முன்னே தெரிவது
கற்சுவரல்ல தம்பி கதவுதான்
மனதில் உறுதி கொண்டு நீ
முயற்சி செய்தால் பாதை தெரியும்

​பாதியில் முடியும் பயணமல்ல
பாரினில் உந்தன் வாழ்க்கை தம்பி
பராரியின் வாழ்க்கையை உயர்த்திட
பாதைகள் நீ வகுத்திடனும்

கண்களில் நீரோடு வாழ்வு தேடி
காத்திருக்கும் தங்கைகள் வாழ்வு
காலத்தோடு மலர்ந்திட நீயும்
காரியங்கள் பல ஆற்றிட வேண்டும்

​பொறுத்திடும் காலம் போய்விட்டது
பொங்கிடும் காலம் புகுந்திட்டது
புனிதமான பணிகளை நீயும்
ஓஉரிந்துணர்வுடன் ஆற்றிட வேண்டும்

​சமத்துவம் என்றொரு வார்த்தை
சரித்திரமாகிட வேண்டுமெனில்
சகோதரர் நீவீர் உண்மையுடன்
சமுதாயம் தன்னை உயர்த்திடனும்

நாட்டினை உயர்த்திட உழைத்திட்ட
நேற்றைய முதியவர் வாழ்ந்திட
இன்றைய இளைஞர் திட்டங்களை
நாளைய மனதுடன் தீட்டிடனும்

​அரசியல் என்பது மக்களுக்காக
மக்கள் வாழ்வது அரசியலுக்காக அல்ல
தலைவர்கள் புரிந்திட்டு நடைமுறையில்
த்ரத்தினை உயர்த்திட முயன்றிடனும்

​உனக்குள் உறங்கும் உலகத்தினை
உணர்வெனும் விசையுடன் உருட்டிடு
உதயம் ஆகிடும் புதிய உலகம்
உரைத்திடு இதையே உறவுகளிடம்

உழைப்பின் வியர்வை துளிகள்
உன்னதம் தரும் விதைகள் தம்பி
உறுதியின் நிலத்தில் விதைத்தால்
உயர்வு நிச்சயம் மலரும் தம்பி

தோல்வி என்றொரு சொல்லை நீ
தோளிலே சுமக்காதே தம்பி
தொடர்ந்த முயற்சியின் ஒளியில்
தொலைந்த கனவுகள் தேடும் தம்பி

அச்சம் எனும் இருள் நீங்கிட
அறிவு தீபம் ஏற்றிடு தம்பி
அருமைமிகு வாழ்வின் பாதை
அதிலே தானாக திறக்கும் தம்பி

ஒற்றுமை என்னும் பலமுடன்
உலகத்தை அணைத்திடு தம்பி
ஒவ்வொரு இதயமும் இணைந்தால்
ஒளிமயமான நாள்கள் பிறக்கும் தம்பி

நம்பிக்கை நெஞ்சில் விதையென
நாள்தோறும் வளர்த்திடு தம்பி
நன்மை நிறைந்த செய்கைகளால்
நாளைய உலகை உருவாக்கு தம்பி

சக்தி சக்திதாசன்

Wednesday, May 27, 2026

கலக்கமில்லா ஆதவனின் பயணம்

நீலம் பூத்துக் குலுங்கும்
நீண்ட வானமெனும் வீதியில்
கிழக்கிலே தோன்றி மேற்கு வரை 
கலக்கமில்லா ஆதவனின் பயணம்

மூடிவிட எத்தனிக்கும் வெள்ளை,கறுப்பு
மேகக் கூட்டங்கள் வழியெல்லாம் போராட்டம்
தயக்கம் சிறிதுமின்றி சுட்டெரிக்கும் சூரியன்
கதிரோட்டி பவனி செய்யும் பவித்திரம்

உழைத்துக் களைத்து சிவந்த கைகளோடு
உழைப்பாளித் தோழனவன் நாள் முடிவுபோல
சிவந்த செந்நிறக் கதிரவனின் அந்திமாலை ,
சிங்காரரூபம் மேற்கினுள் புதைந்திடும்

பகலென்றும், இரவென்றும் நாளைப்
பாதியாய் பிரித்திடும் கடமை சூரியனுக்கு
இன்பமென்றும், துன்பமென்றும் வாழ்வினைப்
பாதியாய்ப் பிரித்திடும் கடமை காலத்திற்கு

சித்திரப்பூச் சோலைகள் , பசியாற்றும் உணவு
செழித்திட வேண்டுமெனில் பகலவன் வேண்டும்
யுகங்கள் தோறும் எரிந்து கொண்டே இன்னும்
யுகம், யுகமாய் ஒளியுடனே வலம் வருகின்றான்

எரிந்திடும் அனைத்தும் ஓர்நாள் அணைந்திடும்
இதுதான் யதார்த்தமெனில் சூரியன் எப்போது ?
சிந்திக்க மறந்த உண்மைகள் சிந்தையில் படும்போது
சிறியதாய்ப் போகுமெங்கள் வாழ்வின் இன்னல்கள்.

நிசப்தம் சூழ்ந்திருக்கும் நிழலின் மடியில்
நிலவொளி நனைக்கும் நீல இரவுகளிலே
நட்சத்திரம் எண்ணிக்க முடியாத சிந்தைகள்
நெஞ்சத்தின் ஆழத்தில் நிதமாக விழித்திருக்கும்
ஒளியின்றி இருப்பதிலும் ஒளி உண்டு என
உணர்த்திடும் இயற்கையின் அமைதியான மொழி

புயலென எழும் சில வேதனை நாள்கள்
பொழுதொரு கணத்தில் மறைந்து போகும்
கரைந்திடும் மேகமென கவலைகள் எல்லாம்
காலத்தின் கரங்களில் கலைந்து விடும்
நிலைத்தது எதுவுமில்லை என்ற உண்மை
நிம்மதியாய் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

விழித்திடும் விடியலில் புதிய நம்பிக்கை
விழிகளில் ஒளிரும் இனிய எதிர்காலம்
படர்ந்திடும் இருளிலும் பயமில்லை இனி
பாதை தெரிந்தால் பயணம் இனிது
சிறுகதிராய் பிறந்த நம்பிக்கை கூட
சிறந்த நாளை உருவாக்கும் சக்தி கொண்டது

காற்றோடு பேசும் மரங்களின் ராகம்
காலத்தின் இசையென காதில் விழும்
அழகிய அசைவுகளில் உயிர் உணர்த்தும்
அந்த ஒலியில் அர்த்தம் மறைந்திருக்கும்
நிலைத்திருக்கும் ஒன்றே மாற்றமென்றால்
நிகழ்காலமே நமக்கான நித்யம் ஆகும்

பிறப்பும் இறப்பும் இடையே பயணம்
பெருங்கடல் அலைபோல் ஏற்றத் தாழ்வு
சிறிதென தோன்றினாலும் சிந்தையின் வலி
சிற்பமாய் நம்மை வடிவமைக்கும்
ஒவ்வொரு கணமும் ஒரு பாடமெனில்
ஒளிவழி காட்டும் வாழ்க்கை ஆசிரியன்

சக்தி சக்திதாசன்

Tuesday, May 26, 2026

ஒற்றை ரோஜா ஒன்று

என்னைப் பார்த்து
மெல்லச் சிரித்தது
என்வீட்டு தோட்டத்தில்
ஒற்றை ரோஜா ஒன்று

இயற்கை அன்னை
இரைந்த வனப்புகள்
என்னைச் சுற்றியிங்கு
எததனை கவிதைகள்

மெல்லிய இதழ்களின்
சிகப்பு வர்ணத்தில்
தம்மை மறந்து பாடியபடி
தேனருந்த வரும் தேனீக்கள்

பெருமையுடன் நிமிர்ந்து
தென்றலின் தாலாட்டில்
சுயத்தை ரசித்தபடி
துவண்டிடாத ரோஜா

ஓரிரு தினங்களில்
ஒவ்வொன்றாய் இதழ்கள்
உதிர்ந்திடும் வாழ்க்கையின்
உண்மையை அறிந்தபடி

ஆறறிவு கொண்டவரெனும்
ஆணவம் கொண்டழையும்
மாந்தரெமக்கு செப்பிடும்
மகத்தான கருத்தென்ன ,?

வாழ்ந்து கொண்டே கடக்கும்
வாழும்.கணங்களின் உயிர்ப்பினை
அருந்தி மகிழ முடியாதோர்
அடையமாட்டார் ஆனந்த வாழ்வினை

மாலை வெளிச்சத்தில்
மெதுவாய் மங்கியபடி
நிழலுடன் பேசிக்கொண்டே
நின்றது அந்த ரோஜா

காலையின் பனித்துளியில்
காதலை கற்றதுபோல்
சிறு நடுக்கம் கொண்டே
சிரித்தது அதன் இதழ்கள்

பார்வையால் மட்டுமே
பாடம் புகட்டும் பூவை
பார்க்காத மனிதர்கள்
பாரமாய் வாழ்கின்றார்

 
உதிர்வும் ஒரு இசைதான்
உயிரின் இறுதி ராகம்
அதை உணர்ந்த மனமே
அமரத்துவம் தொடும்

சக்தி சக்திதாசன்

Monday, May 25, 2026

நீலவானப் பாதையில்

நீலவானப் பாதையில்
நிற்காமல் பயணிக்கும்
நிலவுமகள் ஊர்கோலம்
நிட்காமிய நிதர்சனம்

சொற்கோர்வை கொண்டிங்கு
மற்றொரு கவிபாடும்
பொற்தருணம் நிகழ்வோடு
சுற்றிடும் காலச்சக்கரம்

என்னுள்ளத் தோட்டத்தில்
எண்ணற்ற மலர்கள்
என்னென்ன வண்ணங்கள்
எவரிட்ட கோலமிது

சிந்தனை வட்டத்துள்
சிதறுகின்ற துளிகளாய்
சிற்பமொன்றின் பிறப்பில்
சிதறுகின்ற துகள்களாய்

வாழ்வெனும் மைதானத்தில்
வித்தியாச விளையாட்டுகள்
வினாத்தாள்கள் வெவ்வேறு
விடையெப்படி ஒன்றாகும் ?

மாயைமூட்ட நிழல்களில்
மறைந்திடும் உண்மைகள்
மனக்கண்ணின் வெளிச்சத்தில்
மலர்ந்திடும் மெய்ப்புகள்

காலத்தின் கரைகளில்
கரைந்திடும் நினைவுகள்
கண்ணீரின் உவர்ப்பிலும்
காதலின் சுவைகள்

அமைதியின் ஆழத்தில்
அலைபாயும் கேள்விகள்
அறிவொளி தீண்டிடில்
அழிந்திடும் மாயைகள்

பிறவியின் பாதையில்
பின்னோக்கி பார்க்கையில்
பிழைகளின் பாடங்கள்
புதியொரு வழிகாட்டி

உயிர்களின் உறவுகளில்
உருகுகின்ற உணர்வுகள்
உலகமெங்கும் ஒன்றாய்
ஒலிக்கின்ற இதயங்கள்

சக்தி சக்திதாசன்

The Wisdom of Letting Go: The Hidden Language of Peace


The Wisdom of Letting Go: The Hidden Language of Peace

One of the hardest lessons in human life is learning to let go.

What we cling to are not objects.

We hold on to memories, relationships, expectations, interpretations, and the weight of unanswered questions.

Questions like “Why did this happen?”, “Why did they act this way?”, “Did I misunderstand something?” keep eating us from within.

But sometimes, these questions will never find answers.

And even when answers do come, they may not give us the peace we seek.

In such moments, letting everything be — just as it is — is not an escape.

It is a higher form of wisdom.

Letting go of people does not mean hating them.

It means quietly accepting that they are not meant to continue with us on our life’s path.

Everyone who enters our life comes to teach us something.

Some bring joy.

Some break us, only to teach us how to rebuild ourselves.

But not everyone is meant to stay until the end.

When we accept this truth, the question “Why did they leave?” transforms into “It was simply their time to go.”

The idea of closure often haunts us.

When a relationship ends, we feel pressured to seek explanations.

We believe, “If we talk once more, everything will be fine,” and this belief pushes us back into the same pain again and again.

But in reality, closure is not something we receive from others.

It is something that must arise within us.

If someone leaves without offering an explanation, that itself is their answer.

Accepting this is the most honest closure we can ever receive.

Not asking for explanations is not a sign of weakness.

It is a decision to protect our mental well‑being.

Because not every explanation will feel fair to us.

Sometimes the answers we seek only create more confusion.

We may never fully understand another person’s actions.

But forcing ourselves to understand them only exhausts us.

True peace comes from accepting that some questions in life will remain unanswered — and that this is perfectly okay.

It is human nature to want others to understand what we are trying to say.

But everyone sees the world through their own experiences, memories, and emotional states.

So it is natural that they may not fully understand our feelings.

When we accept this, our disappointment begins to fade.

When we let go of the need to be understood and begin to understand ourselves, the need for external validation slowly dissolves.

Searching for answers is also a form of suffering.

We often look back at the past.

We ask, “What went wrong?”

But instead of moving us forward, this analysis keeps us stuck in the same place.

If life must move ahead, we must leave some doors open behind us and choose the next path.

Not every story gets a perfect ending.

Some stories stop halfway.

But that does not diminish their beauty.

Letting go is not forgetting — it is holding memories without carrying the weight.

If someone was important to us, we don’t have to erase them completely.

But if they caused us pain, we don’t have to carry that pain forever.

Keeping the memories with love and releasing the hurt slowly — that is true liberation.

This approach gives us a new perspective on life.

We realise that we cannot control everything.

We cannot change what others think or do.

But we can control how we respond.

This understanding strengthens us from within.

We learn to accept life’s changes instead of resisting them.

In the end, letting go is not an ending.

It is a beginning.  
It frees us from the chains of the past and opens us to new possibilities.

Peace of mind does not come from outside.

It must arise from within.  
And the first step toward it is gently releasing everything that causes us pain.

With love,  
Sakthi Sakthithasan

Sunday, May 24, 2026

கண்ணோடு கண் பேசும் தருணம்



கண்ணோடு கண் பேசும் தருணம்
நெஞ்சோடு புது ராகம் இசைக்கும்
நினைவோடு படகேறி ஒரு பயணம்
நிழலாகிப் போனால் துயரம்

விரைந்தோடும் உள்ளத்தில் ஆசை மேகம்
விளையாடும் உணர்வுகள் ஆடுமொரு நடனம்
வரைகின்ற கோலங்கள் அனைத்தும் ஏனோ
விழுகின்ற மழையில் மறையும்

கலைந்தோடும் மேகங்கள் யாவும் மீண்டும்
களைத்தோய்ந்து ஓரிடத்தில் வந்து சேரும்
சிறகொடிந்த பறவை எப்போதும் மீண்டும்
சிறகடித்து பறப்பது உண்டோ ?

மூடி நிற்கும் மேகக்கதவு திறந்தங்கே
மேகக்கூடம் பொழியுமொரு கண்ணீர் வெள்ளம்
கீறி நிற்கும் வானவில்லின் வர்ணஜாலம்
மாறிப்போகும் ஒரே கணத்தில்

சேற்றிலொரு செந்தாமரை மலர்வது போல
நேற்றிலொரு வானத்தில் பொழிந்ததந்த பால்நிலா 
பூத்தவிழி காத்திருக்க இன்றும் தேடுகின்றேன்
போனவிடம் தெரியவில்லை போகட்டும்

மௌனத்தில் மெல்ல விழிக்கும் வார்த்தை
மனதோடு மறைமுகம் பேசும் பாதை
மறைந்தோடும் நொடிகளில் தேடும் நிழல்
மாறாதே நின்றது ஏன் நினைவு

அலைமோதும் இதழ்களில் சிரிப்பு துளி
அறியாமை நெஞ்சத்தில் எழும் ஒரு குழி
அழிந்தோடும் கனவுகள் எங்கோ சென்று
அழகான ஓர் வலியாய் நிற்கும்

தொலைந்தோடும் ஒளியில் தேடும் விழிகள்
தொட்டாலே உடையும் கனவுக் கண்ணாடிகள்
துடித்தோடும் இதயத்தின் ஒலி எல்லாம்
தூரத்தில் ஒலிக்கிறதே ஏன்

காற்றோடும் கலந்துவிடும் மூச்சின் நிழல்
காலத்தின் தடங்களில் மாறும் வழி
காணாத ஓர் உணர்வைத் தழுவ நினைத்தால்
கைகூடாதே நின்றது வாழ்க்கை

பூமியில் விழுந்தாலும் மீண்டும் எழும் மழை
போனதெல்லாம் திரும்பாத ஓர் கதை
புதிதாக பிறக்கின்ற ஒவ்வொரு நொடியும்
புரியாத ஓர் பாடலாய் ஓடும்
ம்

சக்தி சக்திதாசன்

Thursday, May 21, 2026

பூச்சொரியும் காலையொன்றில்

பூச்சொரியும் காலையொன்றில்
பூங்குயிலின் ஓசையோடு
புன்னகைக்கும் விருட்சம் ஒன்று
புதுமலர்களின் விரிதலோடு

​காலையெனும் தேரிலேறி
கதிரவனின் பயணம் தொடங்கும்
மாலையெனும் ஆழியினுள்
மறைந்து விடும் வேளை மட்டும்

​இயற்கையின் அதிசயங்களை
இயக்கிக் கொண்டே நகரும்
ஆதவன் இமைமூட மறந்து
வியக்கும் இணையிலாப்
பொழுதுகள்

​பிறந்திடும் உயிர்களெல்லாம்
மறைந்திடும் காலமுண்டு
இருக்கின்ற நாள் வரையும்
இசைக்கட்டும் இனிய ராகம்

மழைத்துளியின் மெல்லிசையில்
மண்ணின் மணம் பரவிடுமே
மரநிழல்கள் தாலாட்டிட
மயங்கும் பசுமை நிலமே

வானவில்லின் வண்ணங்களில்
வாழ்க்கையின் பாடல் எழுதும்
விடியற்கால ஒளியினிலே
விழித்தெழும் நம்பிக்கை

காற்றினது கரம் தொட்டால்
கனவுகளும் கிளை முளைக்கும்
காலத்தின் ஓர் ஓவியத்தில்
காணாத ரகசியம் தெரியும்

நதியென ஓடும் நாட்களில்
நினைவுகள் மணல் போலே
நெஞ்சினில் பதிந்தவைகள்
நேரமெல்லாம் பேசிடுமே

இரவு வந்து இறங்கும் போது
இமைக்காத விண்மீன்கள்
இனிமையான அமைதியில்
இதயங்கள் தழுவிடுமே

சக்தி சக்திதாசன்

Wednesday, May 20, 2026

தமிழே ! தமிழே !

சின்னச் சின்ன ஆசைகளைத் தேக்கி
சிற்பமொன்று வடித்து வைத்தேன்
சித்திரைப் பூச்சோலை ஒன்றில் தமிழ்
சிந்து ஒன்றைக் கோர்த்து வைத்தேன்

வண்ண மலர்த் தோட்டமொன்றில் முல்லை
வாசம் வீசும் மாலை தொடுப்பது போல்
என்னை வாழவைக்கும் தமிழ்ப் பூவெடுத்து
எழில் கொழிக்கும் மாலை சாத்துகிறேன்

விண்ணை நோக்கி மனம் தாவும் வேளையதில்
விளையாடும் களமொன்றில் தமிழாடும் பொழுது
உணர்வோடு உரசியெங்கும் மகிழ்வூட்டும் போது
உளமெங்கும் சதிராடும் ஆனந்தக் கூத்தென்பேன்

மண்ணில் என்னை தமிழ் மண்ணில் என்னை
மகவாக உதிர்த்த எந்தன் உயர்ந்த அன்னையவள்
முலையூடு பாலூட்டும் போது தமிழ் ஊட்டிய
முன்னைப் பொழுதின் பயன் பின்னே விளையுதோ ?

கண்ணில் காணும் காட்சிகளில் எல்லாம் நான்
காண்பதெல்லாம் தமிழாய் என் வரிகளில் வாழ்வது
தொன்மை வாய்ந்த எந்தன் மொழியின் சிறப்பது
தொடர வேண்டும் உலகில் வாழ்வு முடியும்வரை

சொல்லின் இனிமை சுவைத்திடும் நேரங்களில்
சொர்க்கம் தருவதே தமிழின் ஓசைதான்
உள்ளம் உருகி வழிந்திடும் பாவங்களில்
உயிர்க்கும் உயிராய் திகழ்வது தமிழே தான்

பல்லாண்டு காலம் பசுமையாய் நிற்கும்
பாரம்பரியத்தின் பேரொளி நீயே
என் நெஞ்சின் தாளம் தட்டிடும் ஒவ்வோரு கணமும்
என்றும் ஒலிக்கின்ற தேனிசை நீயே

சக்தி சக்திதாசன்

Tuesday, May 19, 2026

மௌனத்தில் பிறக்கும்மொழியற்ற சொற்களெல்லாம்

நேற்றைய நினைவுகள்
காற்றாக மறையவில்லை
மாறாக
நீறு பூத்த நெருப்பாக
நெஞ்சினிலே மறைந்திருந்து
தகிக்குதன்றோ

​காலமகள் அன்றெமக்கு
கணக்காக பூட்டிய
நட்பெனும் விலங்கு
அடைத்தது சிறையல்ல
அன்பெனும் பாசவலை

​நீலமகள் ஆழியிலே
நிற்காது அலைகளவை
நெஞ்சமதில் அதுபோல
நீங்காது எம்மினிய உரவு

​வருடங்களின் தூரிகையினால்
வரைந்தது நரைமுடிகளல்ல
விலையில்லா நட்பதனால்
விளைந்த அனுபவச் செழிப்புதுவே

வாலிபக் கனவுகளை நாம்
பகிர்ந்து வாழ்ந்த விவேகமது
​எழுத மறந்த குறிப்புகளாய்
ஏதேதோ ஞாபகங்கள்

திரும்ப அங்கு சென்று சொல்ல
விரும்பும் கதைகள் ஆயிரம்
நிரம்பி வழியும் உணர்வலைகள்
நெஞ்சில் பாடும் ராகங்கள்

​ஏனின்று இந்தக் கவிதை?
எனக்குள்ளே எழும்பும் வினா
இரவென்றும் பகலென்றும்
ஏனிரண்டு பொழுதுகளென்றும்
என்பம் என்றும் துன்பம் என்றும்
ஏனிரண்டு உணர்வுகள்
விடையதற்கு இல்லையென்றால்
விடையில்லை என் வினாவிற்கும்

​எம் நெஞ்சில் பூத்த
புனிதமான உறவதற்கு
சாத்துகின்ற கிரீடமென்றே
ஏற்றுக் கொள்வாய் இக்கவிதையை

நினைவுகள் சில நேரம்
நிழலென வந்து செல்லும்
நெஞ்சமோ அவற்றை
நித்தம் தழுவிக் கொள்கிறது
பருவங்கள் மாறினாலும்
பாசம் மாறாததே

பார்வையில் பேசாமல்
பிணைந்த அந்த நெருக்கமே
தொலைவில் இருந்தாலும்
தொடர்கின்ற உணர்வுகள்
தோன்றாத கயிறென
தொட்டுணர்த்தும் உறவுகள்

மௌனத்தில் பிறக்கும்
மொழியற்ற சொற்களெல்லாம்
மூச்சோடு கலந்துபோய்
மூலமாய் நிற்கின்றதே

நாளைகள் எத்தனை வந்தாலும்
நம்மிடம் ஒன்று மாறாது
நட்பெனும் அந்த ஒளி
நிழலின்றி நீள்கின்றதே

சக்தி சக்திதாசன்

Sunday, May 17, 2026

இல்லாத பொருளொன்றில்

இல்லாத பொருளொன்றில்
இருக்கின்ற உண்மைகள்
இருளின் கருமைக்குள்
இரைக்கின்ற வெளிச்சங்கள்
இன்றைக்குள் நாளையின்
இழக்கின்ற பொழுதுகள்

முடியாத பயணத்துள்
தொடராத கனவுகளோடு
காணாத காட்சிகளின்
கரைந்தோடும் வர்ணங்கள்
கண்டுகொண்ட நிஜங்களுல்
கசக்கின்ற உண்மைகள்

இருப்பதின் நிழல்களில்
இல்லாத நினைவுகள்
இமைப்பின் இடைவெளியில்
இழையோடும் மௌனங்கள்
இயலாத ஆசைகளின்
இரண்டுபடும் மனங்கள்

அறியாத பாதைகளில்
அழியாத தடங்களோடு
அமையாத உலகத்தின்
அலைமோதும் உணர்வுகள்
அணுகாத உண்மையின்
அதிர்கின்ற ஒலிகள்

காணொளி போலிருக்கும்
காலத்தின் துணுக்குகள்
கலைந்துபோகும் நாள்களின்
கரைந்த சுவடுகள்
கைவிடும் நினைவுகளில்
காத்திருக்கும் குரல்கள்

தொடங்காத முடிவுகளின்
தொலைந்த விளக்கங்கள்
தோன்றாத உருவங்களில்
தொலைந்து போகும் நிறங்கள்
தொட்டுப்பார்க்க முடியாத
தொடரும் எதிரொலிகள்

மறைந்த உணர்ச்சிகளில்
மிளிரும் வலிகள்
முடிவற்ற சுழற்சியின்
மூச்சிரைக்கும் பயணங்கள்
முகமில்லா கனவுகளின்
முரணான அர்த்தங்கள்

விளங்காத இரவுகளின்
விடியாத வெளிச்சங்கள்
விலகாத நினைவுகளின்
விரியும் இருள்கள்
விழித்திருக்கும் உள்ளத்தின்
விசித்திர நிழல்கள்

சக்தி சக்திதாசன்

Saturday, May 16, 2026

விடிந்து விட்டதே !

விடிந்து விட்டதே !
விழிக்கவில்லையே நீ இன்னும்
முடிக்க உனக்கு இருக்கும்
முற்றுப்பெறா பணிகள் ஆயிரம்
மூடியிருக்க இமைகளை கொஞ்சம்
திறந்து பார் உணர்ந்திடுவாய்

பொறுப்புகளை மூட்டை கட்டி
பரணிலே போட்டு விட்டு
அடுத்தவரின் முயற்சியிலே
இருள் கலைந்திடும் என்றே
இத்தனை காலம் இருந்திட்டாய்
இன்னுமா புரியவில்லை

தானாய் எல்லாம் மாறிவிடும்
தீராத கனவுலகில் வாழ்ந்திட்டாய்
சாவியைத் தொலைத்து விட்டு
உன் வீட்டு கதவுகளை
தட்டித் திறக்க பார்கின்றாய்
தவறு உனக்குத் தெரிகிறதா?

வழியிலே விழி வைத்தும்
விடியல் கண்டு கொள்ளாமல்
வாழ்வின் கதவை மூடிக்கொண்டு
வாசல் தேடி அலைந்திடவே
வந்த வாய்ப்பும் கரைந்திடுமே
உணர்வாய் இதுவே உண்மை

நாளையும் நாளை என்றும்
நம்பிக்கையில் தள்ளி வைத்து
நீட்டிப் போடும் நிமிடங்களால்
நிறைந்திடுமோ நிறைவென்று
நினைத்ததெல்லாம் நிழலாகி
நெஞ்சை ஏமாற்றிடுமே

பேசிப் பேசி முடிவதில்லை
போதியதாய் இருந்ததில்லை
செயலின் பாதை காட்டினாலும்
சொல்லில் மட்டும் வாழ்ந்திட்டாய்
காலம் கேட்ட கணக்குக்கு
பதில் எங்கே சொல்வாயோ

தூக்கி வைத்த கனவுகளும்
தூசு படிந்த திட்டங்களும்
திடீரென வந்து நிறைவேறும்
என எண்ணி ஏமாறாதே
தூரம் நீயே பெருக்கியதால்
தொடக்கம் கூட தடைபடும்

இன்று தொடங்கு இம்முறையே
இமைக்கும் முன் எழுந்திடு நீ
இருளை நம்பி நின்றிடாமல்
இலக்கை நோக்கி நடந்திடு
நாளை என்று காத்திருந்தால்
நடப்பதெல்லாம் கரைந்து போகும்

சக்தி சக்திதாசன்

Friday, May 15, 2026

என்னைத் தேடிய என்னுள்

என்னைத் தேடிய என்னுள்
எனக்கே தெரியாத நான்
எப்படி அங்கே ? அதிசயமே !
எல்லாம் எப்பவோ நடந்தது

சிந்தனைப் பறவை மெதுவாய்
சிறகினை விரித்து பறக்க
சிதறிய எண்ணத் துளிகள்
சித்திரம் வரைந்தே காட்டின

விரிந்த வாழ்க்கை வட்டத்தின்
விட்டத்துள் விழுந்த துளிகளாய்
வழிந்து போன நினைவுச்சுளைகள்
பிழிந்துதந்த சாற்றின் சுவையாய்

இனிக்கும் எந்தன் அனுபவங்கள்
இன்னமும் ஏனோ இதயஒலிகள்
இத்தனை காலம் எப்படியிங்கே
இசைத்தது இத்தகை ராகங்கள்

என்னை மறைத்த மௌனத்தில்
எழுந்து நின்ற ஓர் நிழல் நான்
எதிரில் வந்து நின்றபோது
எனக்கே புதிதாய் தோன்றினேன்

மனத்தின் ஆழக் குளங்களில்
மிதந்த பழைய ஓவியங்கள்
மறந்த கதை சொல்லிவிட்டு
மெல்ல சிரித்துப் போனதே

காலத்தின் காற்று தழுவ
காய்ந்த நினைவு இலைகள்
கண்ணில் விழுந்த தருணத்தில்
கனிந்த சுவையாக மாறின

உள்ளம் ஓடும் ஓசையில்
உருவம் கொண்ட ராகங்கள்
உறங்கிக் கிடந்த உணர்வுகளை
உயிர்த்தெழச் செய்ததேன்

இருளின் இடைவெளிகளில்
இளகும் ஒளி துளிகளாய்
இருந்தேன் நான் எனக்குள்
இன்னும் புதிதாய் பிறந்தேன்

சக்தி சக்திதாசன்

நினைவெனும் ஆழியில்

நினைவெனும் ஆழியில்
நீந்திக் களைத்துப் பின்
கனவெனும் படகெடுத்து
கரையேறும் நேரமிது

​உறவெனும் சங்கிலியால்
உணர்வுகளைப் பிணைத்து
உதிரத்தின் கொதிப்புகளை
உள்ளத்தினுள் அமுக்கி

​பாசமென்னும் புதைகுழிக்குள்
புதைத்து வைத்த சோகங்கள்
மோசத்தின் விளைநிலமாய்
கோஷமிடும் இந் நேரங்கள்

​சுமக்க முடியாச் சுமைகளை
சுமக்கின்ற இதயங்கள் அவை
சுரக்கின்ற ஞானத்தால் இன்று
சுந்தரத் தமிழ்க் கானங்கள்

​வெடிக்கின்ற வேதனைகள் பல
எழுப்புகின்ற ஓலங்கள் ஏனோ
ஓசையின்றி வடிகின்ற விழி
ஓரத்தின் நீர்க்கோலங்கள்

​வாழ்க்கையெனும் வயலிl
விளைவதெல்லாம் துன்பங்களெனில்
வாழ்ந்து விட்ட கணங்களில்
வாங்கி வந்த அனுபவங்கள்

புரியாத புதிராய் இங்கே
புலருகின்ற காலைகள் எல்லாம்
தெரியாத திசையினை நோக்கி
தேய்ந்துவிடும் மாலைகள் ஆகும்

​பகிர்ந்திடத் துடிக்கும் சொற்கள்
பாதியிலேயே முடங்கிப் போக
உதிர்ந்திடத் துடிக்கும் கண்ணீர்
உள்ளுக்குள்ளே உறைந்து போகும்

​வலிகளையே உரமாய் இட்டு
வாடுகின்ற மனதின் தோட்டம்
சலனமில்லாச் சிரிப்பினை மட்டும்
சகலருக்கும் தந்து பார்க்கும்

​காலமெனும் சக்கரத் தடம்
காயங்களைச் செதுக்கிச் செல்ல
கோலமிடும் நினைவுகள் யாவும்
கவிதைவழி உயிர்ப்பைப் பெறும்

​உன் நட்பின் நிழலில் மட்டும்
உலருகின்ற ஈரத் தழும்புகள்
மறுபடியும் வாழ்வதற்கு இங்கே
மனதுக்குத் தெம்பு தரும்!

சக்தி சக்திதாசன்