தமிழின் மடியில் நன்றே
தலைவைத்துத் தூங்கி
தழைத்த கனவில் வந்து
திளைத்த கவிதையிது
முளைத்த உணர்ச்சி
முகிழ்த்தே வெடித்து
முழுதாய் இன்று
தமிழாய் விரிந்தது
களைத்த இதயம்
கனக்கும் போதினில்
கரும்பாய் இனிக்கும்
கன்னித் தமிழிது
துளைத்த அம்பு
துளிர்த்த வலியில்
துளிரும் பொழுதில்
துலங்கும் மொழியாய்
புளித்த பானம் கொடுக்கும்
போதையில் புதையும் மனிதர்
புரியார் இந்தத் தமிழின் போதை
புனித நதியாய் பாயும் கவிதை
விளித்த கருத்து இன்று
விழைந்ததெந்தன் நெஞ்சில்
விழுந்தேன் நான் தமிழன்னை
விரித்த அமுதச்சுழலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
21.09.2006
Saturday, September 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment