Thursday, September 07, 2006

வழி கேட்டால் ...

வழி கேட்டால் ?
வார்த்தைகள் தடக்குமே !
வேதனை உறுத்துமே !

நடக்கத் தெரியாத
பாதையில்
நினைக்கத் தெரியாத வேளையில்
முடிக்க முடியாப் பயணங்களை
முயற்சித்த வழிப்போக்கன்

முடவனிடம்
ஒற்றையடிப்
பாதையில் நடக்கும்
வித்தை கேட்பதுண்டோ ?

விழியற்றவனிடம்
வண்ணங்களை
வர்ணிக்கும் வகை கேட்பதோ ?

அன்புடன்
சக்தி

No comments: