வண்ண வண்ண பூச்சூடி
வந்த எந்தன் மங்கையவள்
வாசம் வீசும் முல்லையாக
வளர்ந்த அந்த அங்கையவள்
மின்னலென்னும் இடைகொண்டு
மிளிர்ந்து வரும் வான்வெள்ளியாய்
மிதந்து வரும் வெண்ணிலவு
மண்ணில் இன்று ஊர்வலமோ ?
சின்ன இதழ் விரித்து இன்று
சிந்துகின்ற புன்னகை கண்டு
சிந்தை நானும் பறிகொடுத்து
சித்தம் இழந்த பித்தனானேன்
எண்ண எண்ணத் தாமரை மலரும்
என்னைத் தன்னுள் மூடிய தோகை
என்று புவியில் நான் பிறந்தாலும்
எந்தன் இதயத் துடிப்பாய் அவளே ...
அன்புடன்
சக்தி சக்திதாசன்
23.09.2006
Saturday, September 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment