உணர்வின் துடிப்பில்
உள்ளத்தில்
உறைந்த காட்சிகளின்
உணர்வுத் துடிப்பில்
விளைந்த கவிதையிது
வேஷங்களின்
மோசங்களைக் கண்டு
வாசங்களைத் துறந்து
பாசங்களை மறந்ததினால்
முளைத்த பாடலிது
தோள்களில் கைகளும்
முதுகினில் கத்தியும்
கொண்டவர்கள்
நட்பெனும் புனிதத்தை
நாசப்படுத்தியதால்
பிறந்த இசையிது
இதுதான் உலகமென்றால்
இவர்தான் மனிதரென்றால்
இனியரு பிறப்பு
இறைவா !
அவசியந்தானா ?
அன்புடன்
சக்தி சக்திதாசன்
Friday, September 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment