Friday, September 01, 2006

உனர்வின் துடிப்பில்

உணர்வின் துடிப்பில்

உள்ளத்தில்
உறைந்த காட்சிகளின்
உணர்வுத் துடிப்பில்
விளைந்த கவிதையிது

வேஷங்களின்
மோசங்களைக் கண்டு
வாசங்களைத் துறந்து
பாசங்களை மறந்ததினால்
முளைத்த பாடலிது

தோள்களில் கைகளும்
முதுகினில் கத்தியும்
கொண்டவர்கள்
நட்பெனும் புனிதத்தை
நாசப்படுத்தியதால்
பிறந்த இசையிது

இதுதான் உலகமென்றால்
இவர்தான் மனிதரென்றால்
இனியரு பிறப்பு
இறைவா !
அவசியந்தானா ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்

No comments: