விடியும் பொழுதே !
விரைந்து நீயும் வந்து
வளரும் காலையை
வலை போல விரித்திடு
கண்களை மூடியும்
கனவுகள் எட்டா
காரிருள் இரவின்
இருளைக் கலைத்திடு
வானமெங்கும் நீலம் பூசி
வெள்ளை மேகம் பவனியோடு
வையம் தன்னைச் சிலிர்த்து
வருவாய் நீயும் விரைந்திங்கு
காதல் நினைவுகள் தளிர்க்கும்
கனிந்த எழிலாள் வெண்ணிலா
கண்கள் மூடி நாணம் கொண்டு
காலையுன்னில் ஒளிந்து கொண்டாள்
நாளையுலகை ஆளப்போகும்
ம்பிக்கை நட்சத்திரங்களாம்
நமது குழந்தைகள் எழுந்து
நம்பிக்கையுடன் நடக்கும் பொழுது
பாரினைத் தழுவிய இரவு மகள்
பதறுவாள் ஆதவன் தேரினில்
பகல் மங்கை நீ பவனி வருகையில்
புலரும் உலகின் நாள் அப்போது
காலைப்பொழுது உன் வரவுக்காய்
த்திருந்தேன் நான் கண்விழித்தே
காக்க இனியும் வைக்காது நீயும்
காற்றிலேறி வந்து உலகை எழுப்பி விடு
அன்புடன்
சக்தி சக்திதாசன்
Thursday, September 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment