கற்பனையில் விரிந்த ஒரு காதல் பொழுதினை கவிதை வரிகளாக்கிக் கணனியிலே தவழ விட்ட வேளையிது.
விரிந்த உன் உதடுகளில்
மலர்ந்த புன்னகைக்குள்
புதைந்து போன இதயத்தினுள்
புலர்ந்ததொரு காதலன்றோ !
மலை தழுவும் மேகம் கண்டு
மனமெங்கும் மையல் கொண்டு
முகம் தேடி ஓடி வந்தேன்
மேகமென ஏன் கலைந்தாய் ?
சுரக்குமெந்தன் உணர்வுகளை
ஓடுகின்ற ஓடையாக்கி
கனவு எனும் கப்பல் செய்து
காதல் வழி செல்ல விட்டேன்
உனைக் காணா வேளைகளில்
எனைத் தொலைத்துத் தேடுகிறேன்
கணப் பொழுது கண்டு விட்டால்
கண் நிறைத்து மூடுகிறேன்
விழி வீசும் பார்வைக் கணை
நெஞ்சமதைத் துளைத்துச் சென்று
கல்லில் பதித்த சித்திரமாய்
உன் வதனம் வரைந்ததடி !
சக்தி சக்திதாசன்
No comments:
Post a Comment