நீலவான முன்றலிலே
முழுநிலவின் வெளிச்சத்தில்
மின்னுகின்ற தோரணங்கள்
கண்சிமிட்டிக் கதை கூறும்
மூடுகின்ற விழிகளுக்குள்
முழுவர்ணக் கனவுகளாய்
முப்பரிணாம காட்சிகளாய்
முடிச்சவிழ்க்கும் நினைவுகள்
உள்ளமெங்கும் வெள்ளமாக
உள்ளதெல்லாம் கற்பனையே
உருவமில்லா உணர்வுகள்
உருட்டுகின்ற உரசல்கள்
சுட்டெரிக்கும் கதிர்களோடு
சூரியனின் சுற்றுப்பயணம்
விட்டகழும் பனிப்புகார்கள்
விரைந்தோடும் காலைகள்
புதியதோர் விடியலிது
புதியதொரு பயணமிது
பிறக்குமொரு புத்துணர்ச்சி
புதுமுயற்சி புதுத்துணிவு
எம்விடியல் எம்கையில்
எதுக்கிங்கே ஏக்கங்கள் ?
விழுவதெல்லாம் எழுவதற்கே
விளைந்ததெல்லாம் அனுபவமே !
விதைத்தவைகள் நன்மையெனில்
அறுப்பதுமே நன்மைகள்தான்
கதைகளுக்கு முடிவுண்டு
காலத்திற்கோ எல்லையில்லை
விழிப்புணர்வு கொண்டிட்டால்
விடியல்கள் வெளிச்சமே !
உள்ளத்திலே கள்ளமில்லை
உணர்வுகளில் உரசலில்லை
சக்தி சக்திதாசன்
No comments:
Post a Comment