கடந்துபோன காலங்கள்
நிகழ்ந்துபோன நிகழ்வுகள்
முடிந்துபோன கதைகள்
முதிர்ந்துபோன ஞாபகங்கள்
முடிவில்லாத கதைகளாக
முற்றுப்பெறாத எச்சங்கள்
விளக்கமுடியா விதிகளாக
விந்தைமிகு சாத்திரங்கள்
திறந்திருக்கும் கதவுக்குள்
திறக்கமுடியா புத்தகங்கள்
படிக்கமுடியா தொலைவிலே
பயனுள்ள தத்துவங்கள்
தேவையற்ற தேடல்களைத்
தேடிவரும் உறவுகளும்
தேடிச்செல்லும் வேளையிலே
தீர்ந்துபோகும் தேவைகளும்
நிலையில்லா வாழ்க்கை
நித்தியமும் ஓதுகின்றார்
சத்தியத்தின் வாயிலிலே
சரித்திரத்தை மறைக்கின்றார்
தொலைத்த வாசலொன்று
தனக்குள்ளே உள்ளதென்று
தெரியாமல் தவிக்கின்றார்
தெரிந்தவர்கள் சிரிக்கின்றார்
காவோலை விழுமென்று
காத்திருக்கும் குருத்தோலை
புயலுக்குத் தெரியுமா
பறிக்கும்போது எதுவென்று ?
இக்கணத்தில் வாழ்வதொன்றே
எக்கணமும் அறிவுடமை
நாடகம்தான் உலகென்றால்
நாமதிலே நடிகர்களே !
சக்தி சக்திதாசன்
No comments:
Post a Comment