Tuesday, October 02, 2007

சத்தியம் ஈன்றெடுத்த சரித்திர நாயகன்

சத்தியத்தின் மைந்தனே
சரித்திரத்தின் நாயகனே
சாதனையின் பிறப்பிடமே
சுதந்திரத்தின் இருப்பிடமே

ஆயுதம் எடுக்காமலே நீ
அடக்குமுறையை எதிர்கொண்டாய்
அஹிம்சையின் ஆதாரமே
அமைதியினால் அகிலத்தை
ஆட்கொண்டவனே

அறிவினை வளர்த்துக் கொண்டாய்
அன்னைபூமியை மனதில் கொண்டாய்
ஆஸ்திகளை தூக்கியெறிந்து
என்அண்ணலே துன்பத்தைத் தாங்கிக்கொண்டாய்

பாரதமாதாவின் தவப்புதல்வன்
பாரினில் உரிமையைப்
பாதுகாக்கபணிவுகூட
ஆயுதம் எனக்காட்டியவன்
பணிந்தேன் உந்தன் பாதங்களை

துப்பாக்கியால் பேசியவர்களை
துல்லியமாய் மதித்து நீயும்
துணிந்து உன் தாய்நாட்டின்
தூய்மைதனைக் காத்தவனே

அன்பு, சத்தியம், துணிவு, கருணை
ஆயுதங்களாய்க் கொண்டு
அவனியில் உள்ளோர்க்கெல்லாம்
அண்ணல் காந்தி ஓர் மகாத்மாவானாய்

உந்தன் பாதையை தொடர்ந்தே
உள்ளத்துள் சத்திய சோதனை நடத்தியே
உண்மையான சுதந்திரத்தை நோக்கி
உருளட்டும் எமது பயணம் உலகில்

காந்தி ஜெயந்தி இது
காலத்தில் அழியா மனிதனின்
காவிய வாழ்வினைப் போற்றியே
கருணை நெஞ்சில் கொண்டே வாழ்வோம்

அன்புடன்
சக்தி

No comments: