சத்தியத்தின் மைந்தனே
சரித்திரத்தின் நாயகனே
சாதனையின் பிறப்பிடமே
சுதந்திரத்தின் இருப்பிடமே
ஆயுதம் எடுக்காமலே நீ
அடக்குமுறையை எதிர்கொண்டாய்
அஹிம்சையின் ஆதாரமே
அமைதியினால் அகிலத்தை
ஆட்கொண்டவனே
அறிவினை வளர்த்துக் கொண்டாய்
அன்னைபூமியை மனதில் கொண்டாய்
ஆஸ்திகளை தூக்கியெறிந்து
என்அண்ணலே துன்பத்தைத் தாங்கிக்கொண்டாய்
பாரதமாதாவின் தவப்புதல்வன்
பாரினில் உரிமையைப்
பாதுகாக்கபணிவுகூட
ஆயுதம் எனக்காட்டியவன்
பணிந்தேன் உந்தன் பாதங்களை
துப்பாக்கியால் பேசியவர்களை
துல்லியமாய் மதித்து நீயும்
துணிந்து உன் தாய்நாட்டின்
தூய்மைதனைக் காத்தவனே
அன்பு, சத்தியம், துணிவு, கருணை
ஆயுதங்களாய்க் கொண்டு
அவனியில் உள்ளோர்க்கெல்லாம்
அண்ணல் காந்தி ஓர் மகாத்மாவானாய்
உந்தன் பாதையை தொடர்ந்தே
உள்ளத்துள் சத்திய சோதனை நடத்தியே
உண்மையான சுதந்திரத்தை நோக்கி
உருளட்டும் எமது பயணம் உலகில்
காந்தி ஜெயந்தி இது
காலத்தில் அழியா மனிதனின்
காவிய வாழ்வினைப் போற்றியே
கருணை நெஞ்சில் கொண்டே வாழ்வோம்
அன்புடன்
சக்தி
Tuesday, October 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment