Monday, August 14, 2006

நீயில்லாத நானில்லை

தட்டினால் தானேதீக்குச்சி பற்றும்
உன் பார்வை
தழுவினாலே என்னிதயம்
பற்றிக் கொள்கின்றதே !

வானத்து நிலவைக்
கண்ணுக்கு விருந்தாக்க
பகலுக்கு இரவென்னும்
கறுப்பாடை போர்த்த வேண்டும்
ஆனால் !
என் மனவானில்
தேயாத வெண்ணிலவாய்
பகலென்ன ! இரவென்ன !
பசுந்தளிராய் உன் வதனம்

நீரின்றிப் பயிர் வாடும்
நிலவின்றி இரவு மாயும் - உன்
நினைவின்றி நெஞ்சம் நோகும்
நானென்று ஒன்று இல்லை
நீயில்லாத ஞாலத்திலே ...

அன்புடன்
சக்தி சக்திதாசன்

No comments: