Thursday, December 18, 2025

நேசிப்போ ? வாசிப்போ ?

வாசிக்கப்படுவதால் நேசிக்கப்டுவேனோ ?
நேசிக்கப்படுவதால் வாசிக்கப்படுகிறேனோ
யோசிக்காமல் எழுதிக்கொண்டே
யாசிக்கிறேன் பிரபஞ்ச சக்தியை

பஞ்சுமலர் தோட்டத்தில்
பிறப்பெடுத்த காரணத்தால்
முட்கள் மீது நடல்கவில்லையெனும்
முட்டாளின் வாதமல்ல 
கடந்துவந்த்ச் பாதைகளில்
நடந்தபோது உணர்ந்த பல
வலிகளும், ஆனந்தமும் தந்த
அனுபவங்களின் சேர்க்கையே

பெரிதாய் எதையும் சாதித்த
அரியதோர் பிறப்பல்ல
சிறிதாய் தோன்றும் உணர்வுகள்
அறிவாய் நெஞ்சில் தோன்றுவதால்
பறித்த அனுபவப் பூக்களினால்
உறுதியாய் கட்டிடும் மாலையிது

உள்ளத்தின் ஏதோவொரு மூலையில்
அள்ள அள்ள குறையாமல் ஊறும்
வெள்ளமெனத் தமிழ் பாய்ந்திட
நல்ல பல உள்ளங்களோடு 
மெல்ல நானும் பகிர்ந்திடும் வேளை
சொல்ல முடியா சொற்கள் கூட்டி
வெல்ல நினைக்கும் இலக்கிய யுத்தம்

மூச்சிருக்கும் வேளை வரை
வீச்சிருக்கும் என் கவிதை வாள்
மிச்சமில்லா வகையினில் வரிகளின்
சொச்சங்களை கூட்டியாக்கும் கவிதை
எச்சங்கள் தானிங்கு எம்பிடுமோ ?
நிச்சயமாய் பாடுமொரு உண்மை

தினந்தோறும் எழுதுகிறேன்
மனந்தோறும் தட்டும் எனும் நினைத்து
நிறைந்தோடும் வாழ்வுப் பயணம்
அறந்தாங்கும் வழியேகி என்றும்
சிறந்தோங்கி வாழ்க என வாழ்த்தி
சுரந்திங்கு வணங்கி மகிழ்கிறேன்

சக்தி சக்திதாசன்