பூச்சொரியும் காலையொன்றில்
பூங்குயிலின் ஓசையோடு
புன்னகைக்கும் விருட்சம் ஒன்று
புதுமலர்களின் விரிதலோடு
காலையெனும் தேரிலேறி
கதிரவனின் பயணம் தொடங்கும்
மாலையெனும் ஆழியினுள்
மறைந்து விடும் வேளை மட்டும்
இயற்கையின் அதிசயங்களை
இயக்கிக் கொண்டே நகரும்
ஆதவன் இமைமூட மறந்து
வியக்கும் இணையிலாப்
பொழுதுகள்
பிறந்திடும் உயிர்களெல்லாம்
மறைந்திடும் காலமுண்டு
இருக்கின்ற நாள் வரையும்
இசைக்கட்டும் இனிய ராகம்
மழைத்துளியின் மெல்லிசையில்
மண்ணின் மணம் பரவிடுமே
மரநிழல்கள் தாலாட்டிட
மயங்கும் பசுமை நிலமே
வானவில்லின் வண்ணங்களில்
வாழ்க்கையின் பாடல் எழுதும்
விடியற்கால ஒளியினிலே
விழித்தெழும் நம்பிக்கை
காற்றினது கரம் தொட்டால்
கனவுகளும் கிளை முளைக்கும்
காலத்தின் ஓர் ஓவியத்தில்
காணாத ரகசியம் தெரியும்
நதியென ஓடும் நாட்களில்
நினைவுகள் மணல் போலே
நெஞ்சினில் பதிந்தவைகள்
நேரமெல்லாம் பேசிடுமே
இரவு வந்து இறங்கும் போது
இமைக்காத விண்மீன்கள்
இனிமையான அமைதியில்
இதயங்கள் தழுவிடுமே
